அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகன் நாராயணன்(25). இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் பழைய அரசு மருத்துவமனை முன்பு கோட்டூரில் இருந்து சாத்தூர் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி தனது கையில் வைத்திருந்த அரிவாளால் பேருந்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். கையில் அரிவாள் வைத்திருந்ததால் செய்வதறியாது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அருகிலுள்ள சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் நாராயணனை பிடித்தனர். ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நாராயணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்