districts

தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

விருதுநகர், ஜன.27- விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 127 வது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்தார். மேலும் இதில், மாவட்ட வருவாய் அலு வலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் பிரித்திவிராஜ், திட்ட இயக்குநர் திலகவதி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். 

;