விருதுநகர், ஏப்.2- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்கா விளையிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து விருது நகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது (சனிக் கிழமை நள்ளிரவு 12.30) பேருந்தின் டயர் வெடித்தது. இதில் டீசல் டேங்கிலிருந்து டீசல் கசிந்தது புகை வந்துள்ளது. இதைப் பார்த்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினர். பேருந்திலிருந்த ஊழியர்கள் மற்றும் 14 பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்து எரிந்து நாசமானது.