♦ விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பிள்ளையார்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்ததில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அனைத்தும் தரையில் சரிந்து நாசமாகின.
♦ இதனால் விவசாயி முத்துக்குமாருக்கு ரூ.10லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட முத்துக்குமாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.