சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜெய்சித்ரா(24) என்ற பெண் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் பட்டாசு ஆலையில் 97 அறைகளில் 200 க்கும் மேற்ப்பட்ட பட்டசு தொழிலாளர்கள் பணியாற்ரி வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பட்டாசு ஆலையில் கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயினை ஆணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஜெயசித்ரா என்பவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.