விருதுநகர், ஜூன் 10- விருதுநகரில் ஆட்டோ வில் தவற விட்ட 22 பவுன் திருமண நகையை உரியவரி டம் ஒப்படைத்த நேர்மை யான ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விருதுநகர் பெரிய வள்ளி க்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி- முத்துலட்சுமி தம்பதியர். இவர்களது மகள் பிரியாவுக்கும் ராம் என்பவ ருக்கும் விருதுநகர் ராமர் கோவிலில் வெள்ளியன்று காலை திருமணம் நடந்தது. பிற வைபவங்கள் இராம மூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. பெண்ணின் பெற்றோர் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ள னர். ஆட்டோ ஓட்டுநர் இராமர் அவர்களை திருமண மண்ட பத்தில் இறக்கி விட்டு ஆர்.எஸ்.நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதை கண் டார்.பேக்கை திறந்து பார்த்த போது அதில் ஏராள மான நகைகள் இருப்பதைக் கண்டார். அப்போது, காலையில் தனியார் திருமண மண்ட பத்தில் சிலரை இறக்கி விட்டது அவரது நினைவு க்கு வந்தது. இதையடுத்து, உடனடி யாக இராமர், அந்த திருமண மண்டபத்திற்குச் சென்றார். அப்போது , நகைகளைத் தவற விட்ட கவலையில் பெண்ணின் பெற்றோர் கண் ணீருடன் அங்கு நின்றிருந்த னர். அந்த நேரத்தில் அங்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களிடம் நகைகள் இருந்த பையை வழங்கினார். அங்கிருந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் முன்னி லையில் நகைகள் சரிபார்க் கப்பட்டு பெண்ணின் பெற் றோரிடம் ஒப்படைக்கப் பட்டது. இதனால் பெண்ணின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும், திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர்கள் மற்றும் போலீ சார் ஆட்டோ ஓட்டுநரை மனதாரப் பாராட்டினர்.