ராணிப்பேட்டை, டிச. 5- ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் சோளிங்கர் வட்டங் களில் உள்ள பாறைமேடு, சோகனூர், கணபதிபுரம், பாராஞ்சி ஆகிய கிராமங்க ளில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக் கின்றனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, அடிப் படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை யிட்டு வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 25 பெண் கள்,25 ஆண்கள் என 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் என்.காசிநாதன் முன்னிலையில் உறுதி மொழி ஏற்று தங்களை இணைத்துக் கொண்ட னர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் எம்.குமார், சிபிஎம் அரக் கோணம் தாலுகா செயலா ளர் ஏ.பி.எம்.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழரசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, சிபிஎம் அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினர்கள் தா.ஞானமுருகன், எஸ்.தென்னரசு, பலராமன், வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.