districts

ராணிப்பேட்டையில் மகளிர் குழுவுக்கு தனி வங்கி

ராணிப்பேட்டை,  ஜன. 7- ராணிப்பேட்டை மாவட்டம்  தாமரைப்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரோனா தடுப்பூசி, தூய்மை இந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை, பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திமிரி ஒன்றியக் குழுத் தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது. இதில் இந்தியன் வங்கி பொது மேலாளர் ஆலேயம்மா ஆபிரகாம் பேசுகையில், ஒன்றிய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

;