சோளிங்கர், ஏப். 4- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட எசைய னூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது. நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயனக் கழிவுநீர் கலப்பதால் ஏராள மான மீன்கள் இறப்பதாகக் கூறப்படு கிறது. பல நாட்களாக மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயனக் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.