ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் அத்தியானம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 10 இருளர் இன குடும்பத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா.சரவணன், லயன்ஸ் கிளப் சங்க தலைவர்கள் ஏ.சத்தியமூர்த்தி, ஏ.பரமேஸ்வரன் உதவியுடன் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். இதில் மாநில துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிபிஎம் கலவை தாலுகா செயலாளர் எஸ்.கிட்டு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சேகர், செயலாளர் எம்.குமார், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.