ராணிப்பேட்டை, அக்.19- ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுப்ப தாக ராணிப்பேட்டை ஆட்சியர் உறுதிய ளித்ததை அடுத்து விவசாயிகள் சங்கம் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 6 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட் டத்தில் விவசாயிகள ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விவசாயிகளை அச்சுறுத் தும் விதமாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு பேசினார். மேலும் மாவட்ட நிர்வாகம் எந்த உத்தரவாதமும் அளிக்காததால், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.நேரு, மாவட்டச் செய லாளர் எல்.சி.மணி, தலைவர் எஸ்.கிட்டு, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட அமைப்பாளர் என்.காசி நாதன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரச்ச னைக்கு உரிய தீர்வு காண ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரி வித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாகவும், உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மேலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.