சென்னை,மார்ச் 16- தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே நாக தாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலை யில் வியாழனன்று (மார்ச் 16) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் முனி யம்மாள் (65) மற்றும் சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்த பழனிம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- பட்டாசு ஆலை விபத் தில் இரண்டு பெண்கள் பலி யான துயரமான செய்தியைக்கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந் தேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து பென்னா கரம் அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்திற்கு (52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத் திற்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள் ளேன். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.