மதுரை, ஏப்.1- தமிழகத்தை மாற்றாந்தாய் மனப் போக்குடன் அணுகுகிறார் பிரதமர் மோடி. தமிழகம் உள்ளிட்ட தென் மாநி லங்களில் ‘இந்தியா’ கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என்றார் திரைக்கலைஞரும் சமூக செயற்பாட்டா ளருமான ரோகிணி. திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி களின் ஆதரவுடன் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து திரைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி திங்களன்று காலை ஜெய்ஹிந்த்புரம், திடீர் நகர், சொக்கலிங்க நகர் பகுதி களில் வாக்குச் சேகரித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், ‘‘மதுரை மக்களவை தொகுதியில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடும் சு.வெங்கடேசன் மாண வர்களுக்கு கல்விக்கடன், மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி, நீர்வழித்தடங்கள் மீட்பு (மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளார்) அங் கன்வாடி மையங்கள் அமைத்துக் கொ டுத்துள்ளார்; மக்களின் சுகாதாரப் பிரச்ச னைகளில் கவனம் செலுத்தியுள்ளார். எளிய மக்களின் குரலை நாடாளு மன்றத்தில் எதிரொலிக்க கம்யூனி ஸ்ட்டுகளின் பலம் அதிகரிக்க வேண்டும்.
சு.வெங்கடேசன் நமக்கான வேட்பாளர் எளிய மக்களின் வேட்பாளர். அவரை மதுரை வாக்காளர்கள் மீண்டும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறுகிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ‘‘அவருக்கு ஆசை இருக்கலாம், அவர் விருப்பத்தை சொல்கிறார்.
ஆனால், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்போவது மக்கள் தான். நாடு அச்சுறுத்தலை சந்தித்து வரும் நிலையில், நடைபெறும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன் மையையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே வருகிறார். தமிழகம் மழை-வெள்ளத்தால் பாதிக்கப் பட்டபோது ஒரு பைசா கூட அவர் தர வில்லை.
பொய் வாக்குறுதிகள் மூலம் மோடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மோடி தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பது குறித்து அவர் தெளிவான வாக்குறு தியை அளிக்கவில்லை. தமிழகத்தை மாற் றாந்தாய் மனப்போக்குடன் நடத்துகிறார். மோடி எங்கே சென்றாலும் கேமராக் கள் முன்பிருந்து தான் பேசுகிறார். சிஏஏ சட்டத்திருத்தத்தால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பத்திரம் பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க ளை பாஜக சூறையாடியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும்’’ என்றார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகலா, பகுதிக் குழு செயலாளர்கள் ஏ.எஸ்.செந்தில்குமார், கு.கணேசன், தமுஎக நிர்வாகிகள் ச. தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, வெண்புறா, சாந்தாராம் உட்பட திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் நிர்வா கிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.