வாலிபர் சங்க ஒன்றிய பேரவை
சின்னாளபட்டி, ஜூலை 20- திண்டுக்கல் மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய பேரவை சின்னாளபட்டி யில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ஜி.கிருஷ்ண மூர்த்தி துவக்கி வைத்துப் பேசினார். இந்திய மாணவர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ரிஜோ பிரைட் வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் ஜி. சேது சிவன் நிறைவுரையாற்றினார். ஒன்றியக் கன்வீன ராக பி.தமிழ்ச்செல்வன், துணைக் கன்வீனராக எஸ்.முத்து வேலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை யைத் தீர்க்க வேண்டும். நூலகங்கள் அமைக்க வேண்டும். சாலை வசதி, இலவசக் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை முறை யாக விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன .இது சம்பந்தமாக இயக் கங்களும் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே சிபிஎம் பெண்கள் கிளை அமைப்பு
விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் அருகே சில்லையநாயக்கன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் கிளை அமைக்கப்பட்டது. இந்த கிளை அமைப்புக் கூட்டத்திற்கு கே.முருகேஸ் வரி தலைமையேற்றார். மாநிலக் குழு உறுப்பினர்.எம். மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர்.எம்.சி. பாண்டி யன் ஆகியோர் விளக்கிப் பேசினர். கிளைச் செயலாள ராக எஸ்.பஞ்சவர்ணம் தேர்வு செய்யப்பட்டார். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு ஆயுள் தண்டனை
திருவில்லிபுத்தூர், ஜூலை 20- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 45). இவர் தனது நான்கு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந் துள்ளார். இதுகுறித்து திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட சுந்தர்ராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அப ராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.
ரயில் முன் பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை
சாத்தூர், ஜூலை 20- சாத்தூர் அருகே வேலை பிடிக்காத காரணத்தால் தீய ணைப்பு வீரர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியை சேர்ந்த வர் கருப்பசாமி மகன் ராஜேஷ் (22). இவர் தீயணைப்புத் துறை பணிக்கு தேர்வாகி, கரூரில் உள்ள தீயணைப்புத் துறை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். அங்கு 10 நாட்களே பயிற்சியில் இருந்த அவர், தனது அண்ணன் ரஞ்சித்தை வரவழைத்து எனக்கு இந்த பணி பிடிக்க வில்லை என்று கூறியுள்ளார். மேலும், பணி வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலை யில் மதுரை மார்க்கமாக செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜேஷ் உடலை கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
நத்தம் கோசுகுறிச்சி அருகே வருமானவரித்துறை சோதனை
நத்தம், ஜூலை 21- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரில் மதுரை மாவட்டம் கோச்சடை விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆர் ஆர் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறு வனம் நத்தம்-துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பணி களை செய்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 20 புதன்கிழமை அதிகாலை முதல் இந்நிறுவனத்தில் மதுரை வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தினர். மேலும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி அருகே உள்ள சீகம்பட்டி ஆகிய கல்குவாரி கள் உள்ளிட்ட இடங்களில் முறையாக வருமான வரி செலுத்தாதது, அதிகளவில் சொத்துக்கள் சேர்த்தது போன்ற பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் இவ ருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
போடி அருகே புகையிலை பதுக்கியவர் கைது
தேனி, ஜூலை 20- போடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போடி மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர் சுவாமி கோவில் அருகே வீட்டில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி போடி தாலுகா காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது முடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதில் 39 கிலோ எடை கொண்ட 2500 பாக்கெட்டு கள் கொண்ட புகையிலை பொருட்களை போடி மேலத் தெரு சுந்தர மூப்பன் சந்தில் வசிக்கும் அழகுவேல் மகன் வெங்கடேசன் (55) என்பவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூரில் செல்போன் கடையில் கொள்ளை: 3 பேர் கைது
வேடசந்தூர், ஜூலை 20- வேடசந்தூரில் பின்பக்க இரும்பு கம்பி கதவின் ஓட்டை வழியாக புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளை யடித்துச்சென்ற 3 டவுசர் கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான செல்போன் விற்பனை கடை உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு வழக்கம்போல விற்பனை முடிந்தவுடன் சதா சிவம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். 17ம் தேதி காலை வழக்கம்போல கடையை திறந்தபோது கடையில் இருந்த ரூ .3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் கள் மாயமானது தெரிந்தது. இது குறித்து வேடசந்தூர் காவல்நிலையத்தில் சதாசிவம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது டி சார்ட் மற்றும் டவுசர் அணிந்திருந்த 3 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது, வேடசந்தூரில் அய்யனார்நகரில் வசித்துவரும் நாகராஜ் மகன் குமார்(வயது19) என்பது தெரிந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில் ,அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சூர்யா(23), வேடசந்தூரில் கரூர் சாலையில் வசித்துவரும் முருகன் மகன் பார்த்திபன்(17) என்பது தெரிந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் குமார், சூர்யா, பார்த்தி பன் ஆகியோரை கைது செய்து, 3 பேரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பிரதமர் விவசாயிகள் நிதியுதவி பெறுபவர்கள் நில ஆவணங்களை சரிபார்க்க ஆட்சியர் உத்தரவு
தேனி, ஜூலை 20- பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் தற்போது 12- வது தவணைத் தொகை பெறு வதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரி பார்ப்பு செய்வது அவசியம் என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. தற்போது திட்டப் பயனாளிகளின் நில ஆவ ணங்கள், தமிழ்நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத் தில் காண்பித்து, சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கப்பெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் தாங்க ளாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் ஆதார் அடிப்படை யில் நிதி விடுவிப்பு நடைபெறுவதால், தகுதியான விவ சாயிகள் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், PM-KISAN வலை தளத்தில் e-KYC -ஐ பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் குறைகளை களைய தனி அலுவலர் நியமனம்: ஆட்சியர்
தேனி, ஜூலை 20- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலராக வழக்கறிஞர் கே.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தெரிவித்துள்ளார் . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாள அட்டை, சம்பளம் உள்ளிட்டவைகள் தொடர்பான புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள் ளவும், கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இடங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தொழி லாளர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளவும், மேலும் இதுசம்பந்தமாக உரிய விசாரணை மேற் கொண்டு, பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை நேரடியாகவோ அல்லது மாவட்ட குறை தீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தேனி – 625 531 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது ombudsperson.theni@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட லாம். மேலும், கே.சந்திரசேகரன் அவர்களை 94880 47202 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் -அடிப்படை வசதி செய்திடுக! வாலிபர் சங்கம் மனு
தேனி, ஜூலை 20- நூற்றாண்டு கண்ட பாளையம் அரசு மருத்துவ மனைக்கு தேவையான மருத்துவர்கள் -அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டது. சங்கத்தின் தேனி மாவட்ட பொருளாளர் கே .ராஜா தலைமையில் நிர்வாகிகள் எஸ்.குமரேசன், நாகராஜ் ஆர்.வனராஜா உள்ளிட்டோர் பெரியகுளத்தில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. பிரசவம் பார்ப்பதற்கு வரும் கர்ப்பிணி பெண்களை கம்பம் அல்லது தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு போகச் சொல்லும் நிலை இங்கு உள்ளது. அதே போல அங்கு இரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அவசர சிகிச்சைப் பிரிவை உரு வாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
ரயில் மோதி முதியவர் பலி
சின்னாளப்பட்டி, ஜூலை 21- கொடைரோடு அருகே பள்ளபட்டி இரயில்வே கேட் அருகே பார்வை குறைபாடுடைய முதியவர் இரயிலில் அடிபட்டு பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி சாண்டலார்புரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னன்(72). பார்வை குறைபாடுடைய இவர் புதனன்று அதிகாலை தனது தோட்டத்திற்கு செல்ல பள்ளபட்டி இரயில்வேகேட்டை கடந்து சென்ற போது திண்டுக்கல் லில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற ரயில் மோதி தூக்கிவீசப்பட்டு தண்டவாளத்திலே இறந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைரோடு ரயில்வே காவல்துறையினர் முதியவரின உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் உறவினர் குவாரியில் சோதனை
தேனி, ஜூலை 20- ஆண்டிபட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் உறவினர்களுக்கு சொந்தமான குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் . ஆண்டிபட்டி அருகே டி.சேடபட்டியில் உள்ள கல் குவாரியில் புதன்கிழமை காலை வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் உறவி னர்கள் சரவணப்பெருமாள், ராமு ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இந்த குவாரியில் தேனி மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையி லான அலுவலர்கள் அங்குள்ள ஆவணங்கள், பதிவேடு களை ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அளவிடும் கருவி பொருத்த அனுமதி
தேனி, ஜூலை 20- முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவி யும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரி விக்கும் ஆக்ஸிலரோகிராப் கருவிகள் பொருத்தப் படும் என துணைக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் மூவர் குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக் கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவ ணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு வில் தமிழகத்தின் சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற் றுள்ளனர். அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் சமயங்களில் இக்குழு ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அணை யின் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தபோது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக உயர்ந் துள்ள நிலையில் மத்திய துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்கு பின் குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணை யில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் துணைக்குழு ஆய்வு கூட்டத்தில் அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவியும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்ஸில ரோகிராப் கருவிகள் பொருத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகளிடம் துணைக்குழு தலைவர் தெரிவித்தார். இதன் மூலம் பல ஆண்டு களாக இருந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. வரத்து 1448 கனஅடி, திறப்பு 1885 கன அடி, இருப்பு 6055 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 58.50 அடி, வரத்து 1813 கனஅடி, திறப்பு 969 கன அடி, இருப்பு 3324 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.35 அடி, வரத்து 10 கன அடி, சோத்துப் பாறை நீர்மட்டம் 70.35 அடி, வரத்து 11 கனஅடி, திறப்பு 3 கன அடி.
மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன போஸ்டரை கிழித்த காவல்துறையினர்
ஜூலை 25 இல் ஆர்ப்பாட்டம்
ஜூலை 25 இல் ஆர்ப்பாட்டம் மானாமதுரை, ஜூலை 20- மானாமதுரையில் சிஎஸ்ஐ செவித் திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து நடந்த பாலியல் சீண்டலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரை மானா மதுரை காவல்துறையினர் கிழித்தனர். காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செவித்திறன் குறையுடையோர் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆல்பர்ட் ஆபிரகாம், பால்ராஜ் ஆகிய இருவரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒரு ஆசிரியரை கைது செய்துள்ள னர். பாதிப்புக்குள்ளான குடும்பங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராம லிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந் தார்கள். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாணவி யின் தந்தை ஆகிய இருவருமே வாய் பேசா தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மானாமதுரையில் நகராட்சி அலு வலகம் எதிரே ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம் என்று ஒன்றிய செயலாளர் ஆண்டி தெரிவித்தார்.காவல் துறையால் கிழிக்கப்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன போஸ்டர் பகலில் ஒட்டப்பட்டது.