தூத்துக்குடி, ஜன.12- பொங்கல் பண்டிகைக்காக, சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர்கள், அமோக விளைச்சல் கண்டிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டி கையில் மஞ்சளுக்கு தனிச்சிறப்பு உள்ளது. பொங்கலுக்கு என, தனி மஞ்சள் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் பகுதி தங்கம்மாள்புரம், சக்கம்மாள் புரம் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் பொங்க லை முன்னிட்டு மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அவை தற்போது, அமோக மாக விளைந்துள்ளது. இந்த மஞ்சள் கொத்து, ஜோடி ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அமோகமாக உள்ளதால், உரிய லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.