districts

img

நேரடி உதவி ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு

தூத்துக்குடி, ஜூன் 26- தூத்துக்குடி மாவட்டத்தில் துறை ஒதுக்கீட்டின்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த காவல்  துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறி வித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை ரீதியாக விண்ணப்பித்த 104 பெண்  விண்ணப்பதாரர்கள் உட்பட 705 காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு ஞாயிறன்று (26.06.2022) தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. மேற்படி தேர்வு எழுதும் மையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன் நேரில்  சென்று ஆய்வு செய்தார். இத்தேர்வில் 104 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 78 பேரும், 601 ஆண் விண்ணப்பதாரர்களில் 485 பேரும்  தேர்வில் கலந்து கொண்டனர். மொத்த 705 விண்ணப்ப தாரர்களுக்கு 563 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 142 பேர்  தேர்வில் பங்கேற்கவில்லை. நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்  தேர்வு எழுத 5 ஆயிரத்து 888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு 25 ,26 தேதிகளில் நடந்தது. நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஆரல்வாய் மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ்  பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல்  கல்லூரி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந் தது.  நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் பெண்க ளுக்காக தனித் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12. 30 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து மதியத்திற்கு பிறகும் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.