விருதுநகர், ஜூன் 12- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டியின் 3 வயது மகள் நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத் தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டியின் மகள் மீராஅரவிந்தா (3). இவர், நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறு வதற்கான சாதனை முயற்சி செய்தார். அதா வது, 56 நடன முத்திரைகள் ( அஸம்யுத, திருஷ், கிரீவா பேதாஸ்) மற்றும் 9 நவரசங் களை செய்து உலக சாதனை படைத்தார். இச்சாதனையை புரிந்ததற்கான சான்றி தழ் மற்றும் பதக்கங்களை மீராஅரவிந்தா வுக்கு நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென் இந்திய இயக்குநர் திலீபன் வழங்கினார். இந்நிகழ்வில், ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநில இயக்குநர் ஜெயக்குமார், நடு வர்கள் பசுபதி, நவீன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.