districts

நலவாரிய இணைய வழி சேவை முடக்கம்

விருதுநகர், மே 28- தொழலாளர் நலவாரிய இணையவழி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. எனவே தொழிலாளர் களின் நலன் கருதி உடனடியாக அதை சீர்  செய்திட வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :  தமிழக அரசின் 19 தொழிலாளர் நல வாரியங்களில் உள்ள புதிய உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், கேட்புநிதி மற்றும் அப்டே சன் உள்ளிட்ட அனைத்தும் இணையவழி மூலம் கடந்த கடந்த 2020 ஜூலை 17 முதல்  செய்யப்படுகிறது. மேலும், பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம், வகுப்புச் சான்று,  வாரிசு சான்று என அனைத்தும் இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.   இந்த இணையவழி சேவையில் உள்ள  பிரச்சனைகளை சரி செய்வதற்காக மாநில  தலைமை அலுவலகத்தில் இருந்து கடந்த  மே 13 முதல் 22 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட  10 நாட்கள் பழுது பார்க்கும் பணிகள் நடை பெற உள்ளதாகவும், எனவே, 10 நாட்கள் இணையவழி சேவைகள் நிறுத்தப்படும் என தமிழக அரசின் நலவாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், மே 23 முதல் முதல் அனைத்து  சேவைகளும் இணைய வழியில் சிறப்பாக  செயல்படும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.  ஆனால், தற்போது வரை (மே.,27) நல வாரிய இணையவழி சேவை பணிகளோ, இதர இணையவழி சேவைப்பணிகளோ பயன்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கி றது. இது குறித்து நலவாரிய அதிகாரிகளிட மும் இதர சேவைத்துறை அதிகாரிகளிடமும் கேட்டால் எவ்வித பொருத்தமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் நாள்தோறும் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் நலவாரிய பணப்  பலன்களை பெற முடியாமலும், ஏராளமான பொதுமக்கள் தினமும் பல்வேறு விதமான சான்றிதழ்களை பெறமுடியாமலும் தவித்து வருகின்றனர். அறிவித்த காலத்திற்குள் இணைய வழி சேவையை சீர் செய்யாமல் தொடர்ந்து இணையவழி சேவையை முடக்கி வைத்தி ருப்பதை சிஐடியு- விருதுநகர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் உடனடி யாக மேற்கண்ட இணையவழி சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.