districts

பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: 3 பேர் காயம்

சாத்தூர், ஜன.27- சாத்தூர் அருகே பராமரிப்பு பணியின் போது சுவர் இடிந்து விழுந்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதில் மேலும் 3 பேர் காயடடைந்தனர்.  சாத்தூர் அருகே உள்ள தூங்காரெட்டிபட்டியைச் சேர்ந்த சண்முகநாதன் (50)என்பவருக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இதில், மராமத்து பணிக்கள் நடைபெற்று வருகிறது. இங்கு, 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டின் பழைய சுவரானது திடீ ரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்சி ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த மொட்டையசாமி என்பவரது மகன் முருகன் (50), முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதபாண்டி யன்(46), கார்த்தி (22), மணிகண்டன் (26) ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து,4 பேரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், செல்லும் வழியிலேயே முருகன் என்பவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;