பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வரும் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப்பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் குறைந்த ஊதியம் வழங்குவதைக் கண்டித்தும் ஊதியம் காலதாமதமாக கொடுக்கப்படுவதை கண்டித்தும் அனைத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தபோவதாகவும் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் கூறினர்.