தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ம.கனிஸ்கா-வுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூ.3000 பரிசுக்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் நாகராஜன் உடன் இருந்தார்.