இராஜபாளையம், ஜூலை 5- இராஜபாளையம் அய்யனாபுரம் வடக்கு தெரு பகுதியில் வாறுகாலின் முடிவில் கழிவுநீர் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாகவும், இந்த ஆக்கிரமிப்பினால் கழிவு நீர் முழு வதும் தெருக்களின் சாலைகளில் தேங்கி பொது மக்கள் அப்பகுதி வழியே செல்ல முடியாமல் அவ திப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து அப்பகுதி பெண்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலு வலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பிரச்சனை தொடர்பாக புகார் மனு வினை வருவாய் துறையினருக்கு அனுப்பி வைத்துள் ளோம். வருவாய்த்துறையினர் தான் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுத் தர முடியும். விரைவில் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.