மதுரை, செப்.14- மதுரை காமராசர் பல்க லைக்கழக பெண்கள் வாலி பால் போட்டிகள் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் செப்.11 முதல் 13 வரை நடைபெற்றது. போட்டியில் மதுரை காமராசர் பல்கலை., உறுப் புக் கல்லூரிகளில் இருந்து 16 அணிகள் கலந்து கொண் டன. இதில் முதல் அரை யிறுதியில் யாதவர் கல்லூரி அணி, செந்தில்குமார நாடார் கல்லூரி அணியை 25-19, 25-7 என்ற செட் கணக்கில் வென்றது. இரண்டாவது அரையிறுதியில் அமெரிக் கன் கல்லூரி அணி, மங்கை யர்கரசி கல்லூரி அணியை 25-2, 25-12 என்ற செட் கணக் கில் வென்றது. பின்னர் நடைபெற்ற இறு திப்போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி அணியை 25-12, 25-16 என்ற செட் கணக் கில் வீழ்த்தி சாம்பியன் பட் டத்தை வென்றது. கல்லூரி முதல்வர் முனை வர் ம.தவமணி கிறிஸ்டோ பர், கல்லூரி துணை முதல் வர் முனைவர் மார்டின் டேவிட், கல்லூரி நிதிக் காப் பாளர் முனைவர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக் குநர் முனைவர் மு.பால கிருஷ்ணன் மற்றும் மதுரை காமராசர் பல்கலை., உடற் கல்வி இயக்குநர் முனைவர் ஏ.மகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவி களை வாழ்த்தினர்.