districts

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியை “அனாதையாக” நிறுத்தியது ஏன்?

மதுரை, ஆக.28- ஆன்மீகப் பயணம் வந்த சுற்று லாப் பயணிகள் ரயில் பெட்டி மது ரையில் ஞாயிறன்று தீ பிடித்தது. இதற்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறப்  படுகிறது.  இந்த தீ விபத்தில் ஒன்பது பேர்  பலியாயினர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மதுரையில் முகாமிட்டு ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினார். தீ விபத்  திற்கு கேஸ் சிலிண்டரே காரணம்  என விபத்து ஏற்பட்ட சில மணி  நேரங்களில் உறுதிப்படுத்தப் பட்டது. இருப்பினும் இந்தக் கார ணத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணை யமும் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்டியில் கேஸ் சிலிண்டர் கள் மட்டுமல்ல; விறகுகள், நிலக்  கரியும் இருந்தது கண்டறியப்பட் டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பெட்டிக்கு தனிக் கட்டணம்

ரயில் நிலையத்திலிருந்து வெகு தொலைவில், ஸ்டேபிளிங் லைனில் சுற்றுலாப் பெட்டி நிறுத்  தப்பட்டிருக்கக் கூடாது. ‘‘சுற்றுலா  ஏற்பாட்டாளர்கள் ரயில் பெட்டி களை முன்பதிவு செய்யும் போது,  ரயில்வே நிர்வாகம் பயணிகளுக் கான டிக்கெட்டுகளுக்கு மட்டு மின்றி, வசதிகள் உள்ளிட்ட பிற  பயன்பாட்டிற்காக தனியாக கட்ட ணம் வசூலிக்கிறது’’ என்கிறார் ரயில்வே ஊழியர் ஒருவர். பயணிகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகள் நடைமேடைகளில் தான்  நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் மற்றொரு அதிகாரி, அவர் மேலும்  கூறுகையில், ஸ்டேபிளிங் லைன் களில் தண்ணீர், மின்சாரம் போன்ற  எந்த வசதியும் இல்லை. ரயில் பெட்டிகள் பராமரிப்பிற்காக பிட்- லைன்களுக்குக் கொண்டு செல் லப்படுவதற்கு முன்பு காலியான பெட்டிகளை நிறுத்துவதற்கு மட்டுமே ஸ்டேபிளிங் லைன்கள் பயன்படுத்தப்படும். ஏதாவது ஒரு நடைமேடை யில் பெட்டி நிறுத்திவைக்கப்பட்டி ருந்தால் வெளிவந்த புகை உடனடி யாக கவனிக்கப்பட்டிருக்கும். ஆனால், ரயில் நிலையத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் நிறுத்தப்  பட்டதால், பயணிகள் பூட்டை  உடைக்க முடியாமல் தவித்துள்ள னர். உதவிகேட்டு அவர்கள் எழுப் பிய கூக்குரல்கள் கேட்காமல் போய்விட்டது என்றார். மேலும், ரயில்வே காத்திருப்புக்  கூடத்தில் தங்க வைக்கப்பட்டி ருந்த உயிர் பிழைத்தவர்களில் பலர், தங்கள் கால்களில் வலி இருப்பதாகக் புகார் கூறினர். ‘‘பெரும்பாலான பயணிகளின் வயது 50-க்கும் மேல் என்பதால், அவர்கள் பெட்டியிலிருந்து தரை யில் குதித்திருப்பார்கள். ரயில் தண்டவாளங்களில் சரளைக் கற்  கள் கிடப்பதால் அவர்கள் காயம டைந்திருப்பார்கள்’’ என்றார்.

ரயில் விபத்து குறித்து தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் சங்கரநாராயணனிடம் கேட்டதற்கு, ‘‘இந்த விபத்து தடுக் கப்பட வேண்டியது மட்டுமல்ல. தடுத்திருக்க வேண்டும். முதல் தவறு ரயில்வே துறையில் தான் உள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவில் 10 ஆயிரம் காலிப்  பணியிடங்கள் உள்ளன. பயணச்  சீட்டு ஆய்வாளர்கள் பணியிடங்  கள் 10 ஆயிரம் காலியாக உள்ளது.  இவர்கள் இருவர் மட்டும் தான்  ரயில் பெட்டிகளையும், பயணி களையும் கண்காணிக்கக் கூடிய வர்கள். ஆட்கள் பற்றாக்குறைதான்  இந்த விபத்திற்குக் காரணம். மதுரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை அருகில் சுற்றுலாப் பயணிகளின் ரயில் பெட்டியை நிறுத்துவதற்கு ‘‘ஸ்டே பிளிங் லைன்’’ உள்ளது. இங்கு  கட்டுமானப் பணிகள் நடைபெறு கிறது. தவிர ஆறாவது, ஏழாவது நடைமேடைகளிலும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ரயில்  கட்டியை 800 மீட்டர் தொலைவில் நிறுத்தியுள்ளனர். தவிர சுற்று லாப் பயணிகள் பெட்டி சில நிறுத்  தங்களில் ஒரு நாள் நிறுத்தப் படும். இதற்கு தனியாக ரயில்வே  நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. விபத்து நிகழ்ந்தபின், சிலிண்டர் ஏற்றியது சட்டத்திற்கு புறம்பானது என அதிகாரிகள் கூறுகின்றனர். ‘‘சட்டத்திற்குப் புறம்  பானது தான்’’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போதுமான ஊழி யர்கள் இருந்தால் நிச்சயம் ஒன்பது  பேர் உயிர் போயிருக்காது. சுற்றுலாப் பயணிகள் பெட்டி யில், ஏதோ புதிதாக சிலிண்டர் ஏற்றி  வந்துள்ளனர் எனக் கூறுவது ஏற்கக்  கூடியதாக இல்லை. ரயில்வே பாது காப்புப் படை, பயணச் சீட்டு ஆய்  வாளர் கண்டறிந்தால் கூட, உயர திகாரிகள், ‘‘சுற்றுலாப் பயணிகளி டம் பிரச்சனை செய்யாதீர்கள்’’ எனக் கூறியதெல்லாம் உண்டு என்றார்.

பயணிகள் இருக்கையின் அடியில் மறைக்கப்பட்ட சிலிண்டர்

பயணிகளில் ஒருவரான அசோக் குமார் கூறுகையில், ‘‘லக்னோவில் இருந்து ரயில் புறப்பட்ட பிறகு, ஒரு ரயில் நிலை யத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பயண டிக்கெட் பரிசோதகர் பெட்டியை ஆய்வு செய்தபோது, ‘‘எங்களுடன் பயணம் செய்த உதவி ஊழியர் ஒருவர் கேஸ் சிலிண்டரை எங்கள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்தார். ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது’’ என்றார்.  தேநீரும்-உணவு சமைத்ததும் நடந்தது அசோக் குமாரின் மனைவி கூறுகையில், ‘‘பயணத்தில் பல  இடங்களில் தேநீர் தயாரிக்கப்பட் டது. நாங்கள் ரயிலை விட்டு இறங்கி இடங்களைப் பார்க்கச் சென்ற போது மட்டுமே சமையல் நடந்தது’’ என்றார். ஐந்து பேர் கைது சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக சத்பிரகாஷ் (47), நரேந்திரகுமார் (61), கர்தீஸ் ஜஹானி (24), தீபக் (23), சுபம் கஷியப் (19) ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் 304, 285, 164 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.