மதுரை,ஏப்.4- மதுரை மாவட்டம் சேடப் பட்டி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட பெருங்கா மநல்லூர் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. சுகாதார நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவர்கள் செவிலியர்கள் யாரும் நியமிக்கப்படாததால் பயன் பாட்டிற்கு வராமல் மூடப் பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்தால் பெருங்கா மநல்லூர், சென்னம்பட்டி, சின்ன கட்டளை, செம்ப ரணி உட்பட15-க்கும் மேற் பட்ட கிராமமக்கள் பயனடை வார்கள். மக்கள் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டு மென்றால் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேடப் பட்டி மருத்துவமனைக்கு அல்லது உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரி களிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பிலும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்த சுகாதார நிலையத்தை மாவட்ட நிர்வா கம் எப்போதுதான் பயன் பாட்டிற்கு கொண்டுவரும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சி யர் கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்கள் பயன்பெ றும் வகையில் சுகாதார நிலையத்தை திறந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடி யாக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.