திண்டுக்கல், ஜுன் 23- மாற்றுத்திறனாளிகள் சங்க திண்டுக்கல் மாவட்டச்செயலாளருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவோரு க்கு அச்சங்கம் கண்டனம் தெரிவித்துள் ்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச்செயலா ளராக செயல்பட்டு வருபவர் பகத்சிங். இந்த சங்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை களுக்காக களத்தில் நின்று போராடி வருகிறது. இந்நிலையில் சங்கத்திற்கு எதிராக வும் சங்க மாவட்டச் செயலாளர் பகத்சிங் கின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் சில சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்த தோடு அந்த அவதூறு பதிவுகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமும் அளித் துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச்செயலாளர் பகத்சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மாற்றுத்திற னாளிகளிடம் அரசு நலத்திட்டங்களை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளனர். மேலும் அதோடு ஒரு காணொலி பதிவும் வெளியாகியுள்ளது. இந்த காணொலி யில் மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட் டோர் பணம் பெறும் காட்சிகளும், உடையாடல்களும் இடம் பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு மேற்கண்ட எங்களது செயல்பாடுகளை பொறுக்க முடியாத சிலர் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான இந்த காணொலி மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட் டுள்ளனர். உண்மையில் இதில் இடம் பெற்றுள்ள காணொலி நான்கு வரு டத்திற்கு முன்பு ஆடியோவில் பதிவான சங்பவங்கள். இந்த காணொலியா னது,பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திற னாளிகளை சங்கத்தில் இணைப்பதற்கா கவும் சங்கத்தின் மாநிலத்தலைமையின் சார்பில் வெளியாகும் உரிமைக்குரல் காலாண்டு இதழுக்கான சந்தா சேகரிப்பு நடைபெற்ற போது எடுத்தவை. மேலும் சங்கத்தில் இணைய விரும்பும் மாற்றுத்திற னாளிகள் அவர்களது ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது அதை வரிசையாக அடுக்கி ஒவ்வொருவராக அழைத்து உறுப்பினர் பதிவு செய்த போது தான் இந்த காணொலியானது எடுக்கப்பட்டது. இந்த காணொளியில் பகத்சிங் பின்னால் இருந்து மஞ்சள் கலர் வேட்டி பணம் பெற்ற நபர் மோகன்ராஜ். இவர் இறந்து 3 வருடங்கள் ஆகிறது. உண்மை இவ்வாறு இருக்க, இந்த காணொலியானது இப்போழுது எடுக்கப்பட்டது போல எங்கள் சங்கத்திற்கு எதிராக தான் பொ ய்யான செய்தியை சமூக வலைத்தளங் களில் பரப்புகிறார்கள். சங்கத்தின் நற்பெய ருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு இந்த காணொலி மற்றும் ஆடியோ பதிவை பொய்யாக திரித்து வெளியிட்ட நபர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.