மதுரை, ஜன.25- மதுரை, விருதுநகர், தூத்துக் குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, திண்டுக்கல், தேனி, சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட் டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பய னளிக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகளைத் தொடங்க வலி யுறுத்தி “எங்கே எங்கள் எய்ம்ஸ்” என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜன வரி 24 செவ்வாயன்று மதுரையில் தொடர் முழக்கப் போராட்டம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் தலைமையில் நடைபெற் றது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ உள்ளிட்ட தோழமைக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மதுரை நகர் மக்களும் பெரும் திரளாகப் பங் கேற்றனர். மடீட்சியா, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தொழில் வர்த்தக சங்கம், நுகர்வோர் வியா பாரிகள் சங்கம், ஐக்கிய ஜமா அத் ஆகிய அமைப்புகள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தன.
அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவோம்
இப்போராட்டத் தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசு கையில், “ 2024-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் அறுவை சிகிச்சை மூலம் மோடி அரசு அகற்றப்படு வது உறுதி. நாம் விரும்பும்; மக் கள் விரும்பும் அரசு அமைவது உறுதி. அதனொரு பகுதி தான் இந்தத் தொடர் முழக்கப் போராட் டம்” என்றார்.
பொய் மூட்டைகளோடு அண்ணாமலை
மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசு கையில், “ஆறாத் துயரத்தையும், கோபத்தையும் மக்கள் நம்மோடு இணைந்து வெளிப்படுத்தியுள்ள னர். எய்ம்ஸ் பிரச்சனையில் தென் மாவட்ட மக்களை மோடி அவ மானப்படுத்தி விட்டார். பொய் மூட்டைகளோடு பாதயாத்திரை மேற்கொள்ளப்போகும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யைத் தென் மாவட்ட மக்கள் ஒற் றைச் செங்கல்லோடு வரவேற்பார் கள். அதைப் பார்த்துப் பதிலளிக்க முடியாமல் அவர் திணறுவார். மோடியால் எய்ம்ஸ் மருத்துவ மனையைக் கட்டமுடியாது. 2024- ஆம் ஆண்டு நாம் தான் மருத்து வமனையைக் கட்டப்போகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகு திகளிலும் வெற்றி பெறுவோம்” என்றார்.
ஒற்றைச் செங்கலே போதும்
போராட்டத்தில் பேசிய மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, “தமிழ் நாடு என்று கூற மறுத்த; பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் களைக் கூற மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உடனடி யாகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்தத் துணிச்சல் திமுக விற்கே உண்டு. தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க இந்த ஒற்றைச் செங்கலே போதும்” என்றார்.
2024 வெற்றி நிச்சயம்
மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன் பேசு கையில், “தமிழ் எனக்குப் பிடிக்கும் எனக் கூறிவரும் மோடி தாம் பங் கேற்கும் நிகழ்வுகளில் திருக் குறளை வாசிக்கிறார். தமிழை நேசிப்பதாகக் கூறும் அவர் எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்க மறுக்கி றார். அவர் ஒரு நல்ல நடிகர். 2024- தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ப தற்கு அடையாளமாக இந்தப் போராட் டம் அமைந்துள்ளது” என்றார்.
பொன்.முத்துராமலிங்கம்
திமுக மூத்த தலைவர்களில் ஒரு வரான பொன்.முத்துராமலிங் கம் பேசுகையில், “எய்ம்ஸ் மருத்து வமனையின் நன் மைகள் குறித்து தீக்கதிர் (24.1. 2023) வெளியிட்டுள்ள கட்டுரை யை மேற் கோள் காட்டினார். தமிழ கத்தை வஞ்சித்த பாஜக நாடாளு மன்றத் தேர்தலில் தலைகுனிவைச் சந்திப்பது நிச்சயம்” என்றார்.
மோடி மகா பொய்யர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசிய கதிரவன், “மோடி ஒரு மகா பொய்யர், கோய பல்ஸ். தமிழகத்தின் பாசிஸ்ட்டு கள் எச்.ராஜா, அண்ணாமலை. இவர்களின் கோயபல்ஸ் பிரச்சா ரங்களை அம்பலப்படுத்த வேண் டும்” என்றார். சிபிஐ மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன் பேசு கையில், “இராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவது மிருந்து செங்கலை சுமந்து சென்ற பாஜக, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ஒற்றைச் செங்கல் தவிர எதையும் வாங்கவில்லை. 2024-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு நமது அணியின் அரசு திட்டத்தை நிறைவேற்றும்” என்றார்.