நாகர்கோவில், ஜூலை. 01 கன்னியாகுமரி மாவட்டம் மலையோர கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவ தால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, கோதை யாறு உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 30 நள்ளிரவு முதல் அவ்வப்போது சாரல் மழையும் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்தின் பிரதான அணைகளான பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 40. 40 அடியாக உள்ளது.அணைக்கு நீர்வரத்து 475 கன அடியாக உள்ள அணையில் இருந்து 667 கன அடி நீர் வெளியேற் றப்படுகிறது. அதுபோல் பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் 59. 4 அடியாகயுள்ளது. அணைக்கு வினாடிக்கு 181 கன அடி நீர் வரு கிறது அணையிலிருந்து வினாடி க்கு 310 கனஅடி நீர் வெளியேற்றப்ப டுகிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.