ஈரோடு, நவ. 15- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார் பில் ஈரோட்டில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர் உள்ளிட்ட அனை வருக்கும் நிலுவையுடன் வழங்க வேண் டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஊழியர் களை வஞ்சிக்கக்கூடாது என்ற கோரிக் கைகளை தற்செயல் விடுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் எஸ்.சி.பிரகாசம், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெகநாதன், மாவட்ட துணைச்செயலாளர் கே.கே.ஜெயபிர காஷ், அன்பழகன், டி.கிரி மாவட்ட பொருளாளர் ஜி.செந்தில்குமார் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.