மதுரை, ஏப்.4- 18-ஆவது மக்களவைத் தேர்தல் இன்னுமொரு சுதந்திரப் போராட்டம். ஏப்.19 வாக்குப்பதிவு நாளன்று பாஜக அரசைத் தோற் கடிக்க சபதமேற்று வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என கனிமொழி கருணாநிதி மக்களைக் கேட்டுக் கொண்டார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடே சனை ஆதரித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக வேட்பாளருமான கனிமொழி கரு ணாநிதி வியாழனன்று மதுரை பெத்தானியாபுரத்தில் வாக்குச் சேகரித்து, பிரச்சாரம் மேற்கொண் டார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய இப்பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக குரல் கொடுக் கக்கூடிய, போராடக்கூடிய, தமிழக மக்களுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் எழுதியும், பேசியும் வரும் சு.வெங்கடேசனை மீண்டும் வெற்றி பெறச் செய் யுங்கள். மதுரை தொகுதி வாக்காளர்கள் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்கள். மொழி, மாநில உரி மைகளுக்காகப் போராடுபவர்க ளுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். ‘நெய்பர்’ எனப்படும் மருந்தி யல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத் திற்கு பாஜக அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது பற்றி நான் ஒன்றிய அரசின் நிதித்துறைச் செயலரை நேரில் சந்தித்து மற்ற இடங்க ளுக்கு எல்லாம் நிதி ஒதுக்கும் போது ஏன் தமிழகத்திற்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளேன்.
சு. வெங்கடேசன் ஐந்தாண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தினார். ஆனால் பாஜக அரசு மதுரைக்கு தொடர்ந்து ஓர வஞ்சனை காட்டியே வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை யிலும் பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படு கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் இராமநாதபுரத்தில் படிக்கின்றனர். எல்லா எய்ம்ஸ் க்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கு மாம்; ஆனால், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானிடம் கடன் வாங்கிக் கட்டுவார்களாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி, குஷிநகர், லக்னோ, தற்போது அயோத்தி என நான்கு விமான நிலையங்களைத் திறந் துள்ளது. மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மோடி அரசு திட்டமிட்டு மறுத்து வருகிறது. அதானி, அம்பானிகளுக்கா கவும், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகவும் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். வருடத்தி ற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். தமி ழகத்தில் எத்தனை பேர் ஒன்றிய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ள னர் என்பதை பிரதமர் தெரிவிப்பா ரா? ஆதாரங்களைத் தாருங்கள் என்றால், ‘பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்கிறார்’. பக்கோடா விற்பதற்காகத்தான் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தார்களா? 100 நாள் வேலைத்திட்டத்தை யும் ஒன்றிய அரசு முடக்குகிறது. அதற்கான நிதியை வெட்டிச் சுருக்கி விட்டது. அது மட்டுமல்ல, 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை.
மோடிக்கு மனதில் ஈரமுமில்லை; மனித நேயமும் இல்லை. ஜனநாயகத்திற்கு புறம்பாக கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஜாமீன் வழங்க தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது மோடி அரசு. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பு வோம். வாக்களிப்பது நமது கடமை. ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்காளர்கள் அவர்களுடைய எதிர்காலத்தையும், குழந்தை களின் எதிர்காலத்தையும் கருத் தில் கொண்டு பாஜக அரசை தோற் கடிக்க வேண்டும். ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவது இன்னொரு சுதந்திரப் போராட்டம்’’ என்றார்.