districts

மதுரை முக்கிய செய்திகள்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலக புதிய கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி, நவ.  17 விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழனன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார். விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் இடி-மின்னல் மழை:  அணைகள் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி, நவ. 17- நெல்லை  மாவட்டத்தில்  புதன்கிழமை பகல் முழுவ தும் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. நெல்லையில் மாலை நேரத்தில் திடீரென வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதன் கிழமை இரவில் பெரும்பாலான இடங்களில் பயங்கர சத்தத்துடன் வானில் இடி முழங்கின. அதிக அளவில் மின்னலுடன் கனமழை தொடர்ந்து நீடித்ததால் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது. இதனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருளில் மூழ்கின. வியாழக்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் கன்னடி யன் கால்வாய் பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 43 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வி.கே.புரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் பெய்த கன மழையால் ஒரே நாள் இரவில் பெரும்பாலான சிறிய அளவிலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூலக்கரைப்பட்டி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

மேற்கு வங்காளத்திற்கு 104 பன்றிகள் அனுப்பி வைப்பு

திருநெல்வேலி, நவ. 17- நெல்லையில் இருந்து ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு 104 பன்றிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கட்ட ணங்கள் அடிப்படையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்க ளுக்கு ரெயில் மூலம் இந்த கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில் புதன் கிழமை மாலை நெல்லையில் இருந்து சென்னை செல்லும் அந்தி யோதயா சிறப்பு ரெயிலில் 104 வளர்ப்பு பன்றிகள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பீமாபூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த பன்றிகளை தனிப்பெட்டி மூலம் நெல்லையில் இருந்து அனுப்பி வைத்தார். அவற்றுடன் அதனை பராமரிப்ப தற்காக 3 பேர் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை, பாளையில் நாளை 36 மையங்களில் குரூப்-1 தேர்வு

திருநெல்வேலி, நவ. 17- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு சனிக்கிழமை   நடை பெற உள்ளது. இதற்காக நெல்லை, பாளை வட்டங்களில் ராணி அண்ணா அரசு கல்லூரி, பேட்டை காமராஜர் மேல் நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித் யாஷ்ரம் பள்ளி, நெல்லை சட்டக்கல்லூரி, சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னீர் பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 28 இடங்க ளில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை  தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுகளை பதிவு செய்ய 38 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலை கண்காணிக்க 36 ஆய்வு அலுவலர்கள், சப்-கலெக்டர் நிலையில் 6 பறக்கும்படை அலுவலர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்னர். மேலும் 19-ந் தேதி தேர்வு நடை பெறும் போது தேர்வு மையங்களில் தடை இல்லா மின்சா ரம், பேருந்து வசதி ஆகியவற்றை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்வு அறையினுள் தேர்வர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

நவ.22இல் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் 

தென்காசி, நவ. 17 தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட ரங்கில் வைத்து   செவ்வாய்கிழமை  அன்று தென்காசி  மாவட்டத் தில் உள்ள அனைத்து  திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் லோன்மேளா நடைபெற வுள்ளது. மேற்படி குறைதீர்க்கும் நாள் முகாமில் உறுப்பி னர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட அசல் ஆவணங்கள் இல்லையெனில் அவற்றை வழங்குவதற்கும், வங்கிகடன் உதவி , சுய வேலை வாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு  ஓய்வூதிய திட்டம்,  மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்,  இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளவர்களு க்கு வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும்  தமிழ்நாடு திரு நங்கைகள் நலவாரியம் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திருநங்கைகள் விருப்பத்திற்கேற்ப திறன் பயிற்சியும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ஆவணங்களை அரசுக்கு வழங்கலாம் : ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி, நவ.  17 தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களிடம் வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் எஎன ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்ப கத்தின் கிளை அலுவலகம் மதுரையில் இயங்கி வரு கிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த ஆவணங்கள் பாது காக்கப்பட்டு வரு கின்றன. மேலும், தொன்மையான மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீகத்தை அடையாளமா கக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவ ணங்களை தனிநபர், தனியார் நிறு வனங்கள். மடங்கள், சர்ச், மசூதி ஆகியோரிடம் பெற்று பாதுகாத்து வருகிறது. தற்போது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆவ ணங்களை தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இச்சமு தாயத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயன ளிக்கும் வகையில் Computer / Internet Scanning / Digitization முறையில் பதிவு செய்து அதன் விவரங்க ளை அனைத்து ஊடகங்களுக்கும், புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் தெரியப்படுத்த உள்ளது. எனவே பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், தனி யார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வரலாற்று ஆவ ணங்களை மாவட்ட ஆட்சியர் அல்லது ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக் காப்பகம், எண். 9 பழைய இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை-20 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும். மேலும் தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி புத்தகத் திருவிழா  22இல் துவக்கம் : கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி, நவ. 17 தூத்துக்குடியில் புத்த கத்திருவிழா நடைபெற உள்ள கமலவேல் மஹா லை கனிமொழி எம்பி  தலைமையில் அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை யில் பார்வையிட்டார். தூத்துக்குடியில் புத்தக திருவிழா நடைபெற உள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் முன்னிலை யில் இன்று (17.11.2022) பார்வையிட்டு தெரிவித்த தாவது: தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா 22.11.2022 முதல் 29.11.2022 வரை யு.ஏ.ஆ கமலவேல் மஹா லில் நடைபெறுகிறது. புத்தக திருவிழாவின் ஒவ் வொரு நாளும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தா ளர்கள், பேச்சாளர்கள் தங்க ளது எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவம் மற்றும் தங்களது பயணங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள். எழுத்தாளர்கள் எஸ்.ராம கிருஷ்ணன், பாலகிருஷ் ணன், சோ.தர்மன் மற்றும் உள்ளூர் எழுத்தாளர் கவிதா முரளீதரன் உள்பட பல்வேறு எழுத்தாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற உள்ளது. புத்தக திரு விழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளை ஞர்கள் அனைவரும் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என கனிமொழி எம்பி தெரி வித்தார். ஆய்வில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக் குடி மாநகராட்சி ஆணையா ளர் தி.சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) பீவி ஜான்,  தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அமலா, மாநகராட்சி பொறியா ளர் பிரின்ஸ், ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் தளவாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொம்மைக்குள் எம்டிஎம்ஏ கடத்த முயற்சி கேரள யுவமோர்ச்சா தலைவர் கைது

திருச்சூர், நவ.17- பொம்மைக்குள் வைத்து போதைப் பொருளான எம்.டி.எம்.ஏ.வைக் கடத்த முயன்ற யுவமோர்ச்சா தலைவர் கைது செய்யப்பட்டார். யுவமோர்ச்சா வின் இரிஞ்ஞாலக்குடா முன்னாள் மண்டல தலைவர் எஸ்.பவிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எம் டி எம் ஏ மாத்திரைகள் நிரப்பப்பட்ட பொம்மைகளை கூரியர் மூலம் கேர ளாவிற்கு கடத்த முயன்றனர். பொம் மைக்குள் 88 கிராம் எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டி ருந்தன. பையில் மாத்திரைகள் இருப்பது ஸ்கேனரில் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து, காவல்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து இரிஞ்ஞாலக்குடா யுவமோர்ச்சாவின் முக்கிய தலை வர்களில் ஒருவரான எஸ்.பவீஷ் மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த அபிஜித் ஆகியோர் பெங்களூரு ஒயிட் ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியி ருப்பில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர்.

நாளை  டிஎன்பிஎஸ்சி குரூப்-1   பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 

தென்காசி, நவ. 17- தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடை யநல்லூர், ஆலங்குளம், ஆகிய நான்கு வட்டங்களில் அமைந்துள்ள 27 தேர்வு கூடங்களில்  டிஎன்பிஎஸ்சி குரூப்-1  பதவிக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.  மேற்படி போட்டித் தேர்வினை 7,262 தேர் வர்கள்  19ஆம் தேதி தேர்வெழுத உள்ளனர். தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வினை சுமூக மாக நடத்திட இரண்டு வட்டங்க ளுக்கு தலா ஒரு துணை ஆட்சியர் வீதம் 2 துணை ஆட்சியர்கள் பறக்கும்படை  அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் மேற்படி தேர்வினை எழுதுவோர்களை கண்கா ணிப்பதற்கு 27 ஆய்வு அலுவ லர்களும்,  தேர்வுக்குரிய பணிகள் மேற்கொள்ள துணை வட்டாட்சி யர்கள் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்களும்,  தேர்வின் நடவ டிக்கைகளை பதிவு செய்திடும் பொருட்டு அந்தந்த தேர்வு கூடங்க ளுக்கு  தலா ஒருவர் வீதம்  27 வீடியோ கிராபர்களும்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   மேற்படி தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்குமா றும்,  தேர்வுக் கூடங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்குமாறும், தேர்வு நடைபெ றும் தேர்வு கூடங்களுக்குக் காவல்துறை மூலம் போதிய பாது காப்பு ஏற்பாடுகள் செய்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  ப.ஆகாஷ்   தெரிவித்துள் ளார்.

நாளை  22 மையங்களில் குரூப்-1 தேர்வு குமரியில் 7329 பேர் எழுதுகிறார்கள்

நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளி/கல்லூரிகளில்  நவ.19 சனி யன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணை ந்த குடிமைப்பணிகள் தொகுதி 1 தேர்வு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வானது நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 18 பள்ளி/கல்லூரிகளில் அமைந்துள்ள 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 7329 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்.  தேர்வு மையங்களை கண்காணிக்க 2 பறக்கும் படைகள், 6 வாகனங்களுடன் 22 ஆய்வு அலுவ லர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 22 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடங்களில் 22 காணொளி பதிவாளர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். காலை 9.00 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள். மேலும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் அனுமதிக்கும் உபகரணங்கள் மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். செல்போன், கால் குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

பசு, எருமைக்கு 79 சதவிகிதம் மானியத்துடன் காப்பீடு பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர்

நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்போர்க்கு 70 சதவிகித மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்போர்க்கு 50 சதவிகித மானியமும் வழங்கப்படும்.   இத்திட்டத்தின் கீழ் இரண்டரை வயது முதல் எட்டு வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செsய்யலாம். அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடை களுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவிகிதம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைக ளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்ட ணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.   ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.   கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால் நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால் நடை மருத்துவமனை மற்றும் கால் நடை மருந்தகத்தை அணுகி பயன் பெறலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் பயண நேரம் குறைப்பு

மதுரை: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848)பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 19முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக நண்பகல் 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும்.