விருதுநகர், ஆக.12- உலகில் பூச்சியினங்கள் இல்லை யெனில் மனிதர்கள் உண்ணக்கூடிய 70 சதவீத பொருட்கள் கிடைக்காமல் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக் கக்கூடும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார். விருதுநகரில் தோட்டக் கலைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: இந்த பூமிப்பந்தில் கோடிக்க ணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனி தன் தோன்றினான். ஆனால் மனிதன் தோன்றுவதற்கு முன்பாகவே பூச்சி கள் தோன்றியுள்ளன. ஏறத்தாழ நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்க ளில் 70 விழுக்காடு மகரந்த சேர்க் கைக்கு பூச்சிகளை சார்ந்திருக்கிறது. உலகத்தில் பூச்சி இனங்களை இல்லை என்றால் உணவு உற்பத்தியில் பாதிப்பு உண்டாகும். எனவே, பூச்சிகளின் முக்கியத்து வத்தை மனிதன் புரிந்து கொண்டான். நன்மை செய்யக்கூடிய பூச்சிகளை விவசாயிகள் அறிந்து வைத்திருக்கி றார்கள்.
மனித குல வரலாற்றில், மனித குல நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய மானது விலங்குகளையும், பறவை களையும், பூச்சிகளையும் அதனு டைய பண்புகளை அதனுடைய மனித குலத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வரு வது தான். இன்னும் கோடிக்கணக்கான உயி ரினங்களின் பண்புகள் கண்டுபிடிக்கா மல் உள்ளன என அறிஞர்கள் குறிப்பி டுகின்றனர். இன்னும் கண்டறியப் படாத பூச்சிகளால் மனிதருக்கு ஏற் படக்கூடிய நன்மைகளை நாம் இன் னும் பயன்படுத்திக் கொண்டால் ஒவ் வொரு விவசாயியும் இன்னும் சிறப் பாக செயலாற்ற முடியும். இந்நிலையில், தேனில் உள்ள மருத்துவ குணத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் தெரிவிக்கி றது. தேனுக்கான தேவை என்பது மிக அதிகமாக இருக்கிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சி யாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயி கள் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடி யும். சந்தையில் தரமான தேன்களுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது. இந்த தேனீ வளர்ப்பு என்பது ஒவ் வொரு விவசாயிக்கும் கூடுதல் வரு மானத்தை தரக்கூடியது. எனவே, விவ சாயிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீவளர்ப் பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் தேனீ வளர்க்க பயன்படும் புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இதில் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.