districts

img

கிராம உதவியாளர், ரேஷன் கடைகளில் 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துக!

விருதுநகர், அக்.31- விருதுநகர் மாவட்டத் தில் காலியாக உள்ள கிராம உதவியாளர், நியாய விலைக் கடை விற்பனை யாளர் பணியிடங்களில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத் திற னாளிகளை நியமனம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்  றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நட ராஜன், மாவட்டச் செயலா ளர் கே.நாகராஜ், மாவட்டப் பொருளாளர் பி.அன்புச் செல்வன், ஏ.குமரேசன், க. ஆரோக்கியராஜ், ஸ்ரீதேவி, ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.