districts

img

சேதமடைந்த சாலைகளை சீரமைத்து பாதாளச் சாக்கடைப் பணிகளை தொடங்கிடுக!

மதுரை, ஏப்.26- மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு (விளாங்குடி) பகுதியில் துணை மேயர் நாக ராஜன் செவ்வாயன்று மக்க ளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். விளாங்குடி விரி வாக்கப் பகுதிகளான காரல் மார்க்ஸ் நகர். ஐஸ்வர்யா அவென்யூ, பாரதியார் நகர்  பகுதிகளில் பாதாளச் சாக்க டைப் பணிகள் ஒரு பகுதியில் நடைபெற்றும் மற்றொரு பகுதி யில் நடைபெறாமலும் உள் ளது. பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் புதுப்பிக் கப்படாததால் இரு சக்கர வாக னங்கள் மட்டுமல்ல; மக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்  பட்டு வருகிறார்கள். காரல் மார்க்ஸ் நகர் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோ திகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண் டும். பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண் டும். பாதாள சாக்கடை அமைக்  கப்பட பகுதிகளில் பணிகளை தொடங்க வேண்டும். குண்டும்-குழியுமான சாலைகளை சீர மைக்க வேண்டுமென மாநக ராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜனை சந்தித்து பகுதி மக்கள் கோரிக்கைள் குறித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து செவ்வாயன்று விளாங்குடி பகுதிக்கு நேரடி யாக வந்து ஆய்வு செய்தார். மக்கள் தெரிவித்த குறை களைக் கேட்டறிந்து, மனுக் களையும் பெற்றுக்கொண்டார். அப்போது, “சொக்கநாதபுரம் முதல் தெருவில் சேதமடைந் துள்ள பாலத்தைப் புதுப்பிக்க வேண்டும். கழிவு நீர் வாய்க்கால் கள் அமைக்க வேண்டும். வாடகை கட்டடத்தில் செயல் படும் ரேஷன் கடையை சொந்  தக் கட்டடத்திற்கு மாற்றவேண் டும். கட்டடம் கட்டுவதற்கு தேவையான இடம் உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் துணை மேயரிடம் கேட்டுக் கொண்ட னர். பகுதி மக்களின் பிரச்சனை கள் உரிய அதிகாரிகளின் கவ னத்திற்குக் கொண்டு விரை வில் நடவடிக்கை எடுக்கப்படு மென துணைமேயர் உறுதி யளித்தார். தொடர்ந்து அவர் அப்பகு தியில் செயல்படும் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோ கம், எடையளவு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநக ராட்சி உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன், பொறியாளர் பாக்கியலெட்சுமி, 20-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், ஜனநாயக மாதர் சங்  கத் தலைவர் அம்புஜம் ஆகி யோர் உடனிருந்தனர்.