சின்னாளப்பட்டி,ஏப்.04- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வெங்கடாஸ்திரி கோட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம், கலையரங்கம், விளையாட்டு மைதானம் உட்பட கிராம உபயோகத்திற்கென அரசு சார்பில் வழங்கிய அரசு புரம்போக்கு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை வருவாய்த்துறையினர் மீட்டுத்தரக்கோரி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் திங்களன்று நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.