districts

img

மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 25- மணிப்பூரில் கலவரத்தை கட்டுப் படுத்த தவறிய ஒன்றிய -மாநில பாஜக அரசுகளைக் கண்  டித்தும், பெண்களை நிர்வாணப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்.மாநில பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்  டும் என வலியுறுத்தி சிஐடியு, விவ சாயிகள் சங்கம்,விவசாய தொழி லாளர் சங்கம், இந்திய மாணவர்  சங்கம்,ஆதித்தமிழர் கட்சி ஆகி யவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தேனி மாவட்ட துணைச் செயலாளர் எஸ். ராமர் தலைமை வகித்தார்.விவ சாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன்,சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச் சந்திரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு  மாவட்டத் தலைவர் டி.ஜெய பாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம்,விவசாயிகள் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டி யன், மாவட்டச் செயலாளர் டி. கண்ணன், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.வேல வன், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் கட்சி 

மதுரை ஆறுமுச்சந்தியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  மகளிர் அணி செயலாளர் அய்யம் மாள் தலைமை வகித்தார் ஆதித் தமிழர் கட்சியின் நிறுவனத் தலை வர் கு. ஜக்கையன் கண்டன உரை யாற்றினார். மாநில அமைப்பு  செயலாளர்கள் விடுதலைக்குமார், திலீபன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ஆர். சசிகலா, பொருளாளர் ஜா.  நரசிம்மன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள் 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு அலுவல கம், மதுரை மருத்துவக்கல்லூரி, தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் அலு வலகம், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்ட செயலாளர் க. நீதி ராஜா, இணைச் செயலாளர் பரமசிவம், ராமதாஸ், பொருளாளர் சந்திர போஸ் ஆகியோர பேசினர். வட்டக்  கிளை நிர்வாகிகள், முன்னணி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு ( சிஐடியு) சார்பில் சிவ கங்கையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலச்செயலாளர் உமா நாத், மாவட்ட செயலாளர் கருணா நிதி, ரமேஷ்பாபு ஆகியோர் பேசி னர். 

மாணவர் சங்கம்

பழனி ஆண்டவர் கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கல்லூரி கிளை நிர்வாகி நவீன் குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ் கண்டன உரையாற்றினார். கிளை  நிர்வாகிகள் முகமது இஷாக், முத்து  மாணிக்கம்‌ உள்பட பலர் பங்கேற்ற னர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரா விடர் கழகத்தின் சார்பாக வீர பாண்டி, தமிழர் சமூக நீதிக்கழ கத்தின் நிறுவனர் சுரா.தங்கபாண்டி யன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக சம்பத் ஆகியோர் பேசினர்.