districts

img

சாதி,மத பிரிவினையை வள்ளலாரியம் ஏற்கவில்லை

மதுரை, ஆக.31- மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் அருளாளர் பேரவை துவக்க விழா  ஞாயிறன்று நடைபெற்றது. தொடக்க விழாவுக்கு பெரியார் நெறியாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார். பசுமைப்பள்ளி நடுவன் இடை நிலைக்கல்வி நிலைய முதல்வர் வ. மோகனக் கண்ணன் வரவேற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அக ராதியியல் துறைத் தலைவர் உல. பாலசுப்ரமணியன் தொடக்கவுரை யாற்றினார். மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா நன்றி கூறினார். பேரவையை துவக்கி வைத்து பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில்,  தமிழகத்தில் சமய மாக சைவமும், வைணவமும் மட்டுமே இருந்தன. இந்து சமயமும் இல்லை. இந்து என்பது சிந்து நதிக்கரையில் இருந்த குடியி ருப்பை குறிக்கும் வகையில் சிந்து ஸ்தானி என்பது மருவி இந்து ஸ்தானி என்றும், இந்து என்றும்  மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கால்நடைகளை பலி  கொடுக்கும் சடங்குகளுக்கு எதிராக  கடும் கிளர்ச்சி வெடித்தது.இதன் மூலம் அகிம்சை கொள்கையை  வலியுறுத்தும் சமணமும் பௌத்த மும் செழித்து வளர்ந்தன. இதில் தமிழகத்தில் சமணம் செழித் திருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நால்வருண கொள்கை தமிழர்க ளிடையே பிரிவை ஏற்படுத்தி யது. வர்ணாசிரம கொள்கை  முதலில் தொழில் சார்ந்ததாக தோன்றி பின்னர் பிறப்பு சார்ந்த தாக மாறியது. யாதும் ஊரே, யாவ ரும் கேளீர் என்று பாடிய தமிழ கத்தில் திணிக்கப்பட்டதுதான் வர்ணாசிரம கொள்கை. எனவே வர் ணாசிரமமும் தமிழகத்தில் தோன்றவில்லை. இச்சூழலில் வள்ளலாரியம் தோன்றுகிறது. வள்ளலாரியம் சடங்குகள், சாதி, மத பிரிவினை, மேல், கீழ் பாகுபாடு, உருவ வழிபாடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.