திண்டுக்கல், ஏப்.5- மா மரத்தில் புதிய வைரஸ் தாக்குத லால் பூ, காய்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மா விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டு மென திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை எழுப் பப்பட்டது. மா பாதிப்பு குறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் என்.பெருமாள், “திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த ஆலங்கட்டி மழை- சூறைக்காற் றால் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் காட்டு விலங்குகளின் தொல்லை அதிக மாக உள்ளது. யானை தாக்குதலால் இரண்டு விவசாயிகள் மரணமடைந்துள்ள னர். அந்த விவசாயிகளின் குடும்பங்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை பகுதியில் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அது போல திண்டுக்கல் மாவட்டத்தில் காட்டுப்பன்றி களைக் கட்டுப்படுத்த வனத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாமரங்கள் நோய் தாக்குதலுக்கு உள் ளாகி பூ, பிஞ்சு ஆகியவை உதிர்ந்துள் ளது. நத்தம், சாணார்பட்டி, பழனி பகுதி களில் மா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் விவ சாயிகள் தவறான மருந்து அடித்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்றனர். தொடர்ந்து பேசிய பெருமாள். எந்த மருந்து அடிக்கலாம், எந்த மருந்து அடிக் கக்கூடாது என்று அதிகாரிகள் முன் கூட்டியே விவசாயிகளுக்கு எச்சரித்தி ருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற் பட்டிருக்காது. பாதிக்கப்பட்ட மா விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தவறான மருந்தை மா விவ சாயிகளுக்கு விற்பனை செய்த கடை மற்றும் மருந்துக் கம்பெனிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மேலும், முருங்கை விலை வீழ்ச்சி யடைந்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் முருங்கை உற்பத்தியைப் பெருக்கு வதற்கு அரசு திட்டங்களை அறிவித்துள் ளது. ஆனால் முருங்கைக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி- காவேரி ஆற் றின் உபரி நீரை திண்டுக்கல் மாவட்டத்தின் வடபகுதி மற்றும் சாணார்பட்டி, நத்தம் பகுதிகளில் உள்ள குளங்களில் நிர்ப்பும் திட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது என்றார். ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் கருணாகரன் பேசுகை யில், “பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒற்றை யானை மனிதர்களை வேட்டையாடி வருகிறது. இரண்டு பேர் பலியாகி உள்ளனர். ஒற்றை யானையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் வாரச்சந்தையை ஏலம் விட அரசு முடிவெடுத் திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தச் சந்தையில் ஆடு, கோழி, மாடுகளுக்கு எவ்வளவு வரி என்பதை திட்டவட்டமாக அறிவித்து அதன் படி வசூலிக்க உத்தரவிட வேண்டு மென்றார்.