districts

img

வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வு  பேண்டேஜ் உற்பத்தி தொழில் கடும் பாதிப்பு

 இராஜபாளையம், மார்ச் 30- இராஜபாளையம் அருகே பேண்டேஜ் மருத்துவத் துணி  உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பஞ்சு, நூல் விலை கடும் உயர்வு காரணமாக தொழில் நலிவடைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளன.  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் பேண்டேஜ் மருத்து வத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன.  கடந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு வரை 356 கிலோ கொண்ட நூல் கண்டி ஒன்றுக்கு ரூ.56 ஆயிரம் வரை இருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாத காலத்திற்குள் கண்டி விலை ரூ.90 ஆயிரம் எட்டியுள்ளது.  இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாக வும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகளில் பேண்டேஜ் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இங்கி ருந்துதான் அனுப்பப்பட்டு வருகின்றன.  கடந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு பேண்டேஜ் அனுப்புவதற்கு ஆர்டர் எடுக்கப்பட்டன. பஞ்சு விலை உயர்ந்துள்ளதால் தற்போது அதே விலைக்கு சரக்குகளை அனுப்ப இயலாத நிலை உள்ளதாக கவலையுடன் தெரி விக்கின்றனர்.  எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க வேண்டும், மாநில அரசு ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் தந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.