districts

img

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மண்பாண்ட தொழிலாளர்களை சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை  தெரிவித்தனர் . தமுஎகச மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி,  மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.