இருசக்கர வாகனங்கள் மோதல் : தாய், மகன் உட்பட மூவர் பலி
அருப்புக்கோட்டை, ஆக.,27- அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியைச் சேர்ந்தவர் நாகராஜ்- சங்கரி தம்பதி. இவர்களது மகன் ஆனந்தராஜ். இந்நிலையில், சங்கரி மற்றும் ஆனந்த ராஜ் இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் விருதுநகருக்கு புறப்பட்டனர். விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளம் அருகே வந்த போது, எதிரே பாலவநத்தம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (28) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமானது, ஆனந்தராஜ் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில், சங்கரி மற்றும் அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலி
சிவகாசி, ஆக.27- சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்குள்ள ஸ்டாண்டர்ட் காலனி பகுதியில் மாரிராஜ் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடப் பணியில் கட்டளைபட்டி பகுதியைச் சேர்ந்த பொன் மாரீஸ்வரன் உட்பட பலர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கான்கிரீட் கம்பியை, தொழிலா ளர்கள் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட பொன் மாரீஸ்வரன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும், இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருங்கை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
வருசநாடு, ஆக.27- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏரா ளமான ஏக்கர் பரப்பளவில் முருங்கை விவசாயம் நடை பெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலை யில், போதுமான அளவு மழை பெய்ததால் முருங்கை உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சந்தைகளில் நாளுக்கு நாள் முருங்கை யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கை ரூ.20 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.10 வரை மட்டுமே விற்பனை யாகிறது. முருங்கை உற்பத்தி அதிகரித்தும் விலை இல்லா ததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வாலிபர் கொலை வழக்கில் உறவினர் இருவர் கைது
தேனி, ஆக.27- தேனி அருகே டொம்புச்சேரியில் வாலிபர் குத்தி கொலை செய்த உறவினர்கள் 2 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். தேனி அருகே டொம்புச்சேரியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா(35). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது வீட்டின் முன்பு நின்றிருந்த ராஜாவை அவரது உறவினர்கள் அதே ஊரைச் சேர்ந்த பிரவீன் (23), கணேஷ்குமார் (23) ஆகி யோர் சனிக்கிழமை, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த ராஜா, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாவின் தந்தை கருப்பையா அளிக்க புகாரின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலை யத்தில் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த பிரவீன், கணேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ராஜாவின் சகோதர் மனைவியுடன் பிரவீன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதை ராஜா, அவரது சகோதரர்கள் மருதமுத்து, கணேசன், தந்தை கருப்பையா ஆகியோர் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், தனது உறவினர் கணேஷ்குமா ருடன் சேர்ந்து ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்த தும் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் சேதமடைந்த கூட்டுறவு சங்கத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு
திருவில்லிபுத்தூர், ஆக.27- திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் மாரியம்மன் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத் தில் கடந்த 8.11.2013 அன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரூ.28,37,652 மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அருப்புக் கோட்டையில் இயங்கி வரும் யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் கம்பெனியில் விபத்து குறித்தும் சேதமடைந்த பொருட்களுக்கு முறையீடு செய்தும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காப்பீட்டு தொகையை வழங்கவில்லை. எனவே, காப்பீடு தொகையை வழங்க கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டி.சேகர், உறுப்பினர்கள் சௌந்தரராஜன், சாந்திஆண்டி யப்பன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதில், மாரியம்மன் நெசவாளர் கூட்டுறவு மற்றும் உற்பத்தி விற்பனை சங்கத்தின் காப்பீட்டு தொகை ரூ.28,37, 652 வட்டியுடன் வழங்க கோரியும் சேவைக் குறை பாட்டிற்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சத்தையும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க இந்தியா இன்சூ ரன்ஸ் கம்பெனிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
இராமேஸ்வரம், ஆக.27- இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 450 க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் மீன்வளத்துறையிடம் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றன. கச்சத்தீவு அருகே கடற்படையினர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதாக தெரியவந்த நிலையில் 200-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றது. இந்நிலையில், கச்சத்தீவு அருகே நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்கு தல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்து டன் மீனவர்கள் கரைக்கு படகை திருப்பி ஞாயிற் றுக்கிழமை காலையில் கரைக்கு வந்தனர். 30 ஆயி ரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படை யினர் தாக்குதல் காரணமாக பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்த னர்.
இடையக்கோட்டையில் வீடு, லேத் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஒட்டன்சத்திரம், ஆக.27- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையை சேர்ந்தவர் லட்சு மணன் (51). இவர் சாலையூர்நால்ரோடு செல்லும் சாலை யோரம் வீட்டுடன் இணைந்த லேத் பட்டறையை நடத்தி வந்தார். இந்தநிலையில், ஞாயிறன்று லேத் விடுமுறை என்ப தால் லட்சுமணன், அவரது மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ அனைத்து இடங்களும் பரவி யது. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. ஒட்டன்சத்திரத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வீடு, லேத் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் லேத்தில் இருந்த இயந்திரங்கள், இரும்பு பொருட்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்கச்சங்கிலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
விபத்தில் வாலிபர் பலி
நத்தம், ஆக.27- திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கொசவபட்டியை சேர்ந்தவர் தயாளன் (29). இவர் நத்தத்தில் உள்ள தனி யார் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று வீட்டிற்கு சாப்பிட சென்று விட்டு மீண்டும் கடைக்கு திரும்பி கொண்டி ருந்தார். அப்போது சேர்வீடு விலக்கு பகுதி அருகே மேம்பாலம் அருகே திண்டுக்கல்லில் காவல் ஆய்வா ளர் தேர்வுக்கு சென்று விட்டு மதுரைக்கு சென்று கொண்டி ருந்த சிலைமான் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுப்புராயன் (35) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாக னம் முன்னால் சென்ற தயாளன் வாகனம் மீது மோதி யது. இதில் பலத்த காயமடைந்த தயாளன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை நிலக்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் ஏற்றுமதி
சின்னாளப்பட்டி, ஆக.27- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மல்லிகைப் பூக்களுக்கா கவே எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் பூ மார்க்கெட்டாகும். இது தமிழ் நாட்டில் இரண்டாவது பூ மார்க்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இங்கிருந்து தினமும் மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தில்லி, கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், கனடா, துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் மல்லிகை உட்பட பூக்கள் ஏற்றுமதி செய் யப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாகவே பூக்கள் ஏற்றுமதி மெல்லமெல்ல அதிகரித்து, விலையும் உயர்ந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக தேவை அதிகரித்துள்ளதால் மல்லிகை பூ கிலோ ரூ.800 முதல் 900 வரை விற்பனையானது. இருந்தாலும் சுமார் 6-8 டன் வரையிலான மல்லிகை பூக்கள் கொள்முதல் செய்யப் பட்டு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட் டன. இதே போல முல்லை, ஜாதி, கன காம்பரம் உள்ளிட்ட அனைத்து பூக்களும் அதிக அளவில் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வரத்து அதிகமிருந்த போதிலும் மல்லிகை பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.