districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலியால் குழாய் உடைப்பு சீரமைப்பு

மதுரை அரசரடி - காளவாசல் மெயின் ரோடு எஸ். எஸ். காலனி வடக்கு வாசல் மெயின் ரோடு சந்திப்பில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடியது. வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளதால் குழாயில் உடைப்பு பெரிதாகி கடந்த இரண்டு தினங்களாக ஊற்றுபோல் தண்ணீர் அதிகம் வெளியேறியது. இதனால் சாலையில் பள்ளம் உருவாகி விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த செய்தி வெள்ளியன்று தீக்கதிர் நாளிதழில் வெளியானது.இதன்பின்னரே மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்திடும் பணியில் ஈடுபட்டது. இதனால் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காளவாசல் வழியாக செல்லும் பேருந்துகளை ஏ. ஏ. ரோடு வழியாகச் செல்லும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மாற்றினர்.