மதுரை,ஏப்.12- முஸ்லிம் மக்களை வஞ்சிக் கின்ற,சிறையில் அடைக்கின்ற வகையில் பாஜக அரசு கொண்டு வந்த படுபாதகச்சட்டங்களுக்கு ஆதரவளித்து உறுதுணையாக நின்றவர்கள் அதிமுகவினர் என்று மதுரை பிரச்சாரத்தில் திருச்சி சிவா எம்.பி., கடுமையாகச் சாடினார்.
இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து திமுக வின் நாடாளுமன்ற மாநிலங்கள வைக்குழு தலைவர் திருச்சி சிவா ஏப்ரல் 11 வியாழக்கிழமையன்று மாலை மதுரை தெற்குவாசல் பள்ளி வாசல் சின்னக்கடை வீதியில் வாக்குச்சேகரிப்பு பிரச்சாரம் மேற் கொண்டார்.
பிரச்சாரத்தில் திருச்சி சிவா எம்.பி., பேசியதாவது:
உலகத்திலே மிகப்பெரிய ஜன நாயக நாடு இந்தியா. நமக்குள்ள சிறப்பு அதுதான்.இங்கே மக்கள் தான் தம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். பொது இடத்திலே நின்று ஒரு சாதார ணமான குடிமகன், அரசாங்கம் தவறு செய்கிறது என்று விமர்சிக்கிற பேச்சுரிமை உள்ள நாடு இந்தியா. ஆனால் உண்மை நிலைமை என்னவென்றால், நாடாளுமன்றத் திலே எங்களால் அரசாங்கத்தை விமர்சிக்க முடியவில்லை. எம்.பி.க்களாகிய நாங்கள் எதிர்த்துப் பேசினால், தவறுகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்தால் எங்களது ஒலி பெருக்கிகள் அணைக்கப்பட்டன. இதனையும் மீறி கருத்துக்களை வலியுறுத்த முயன்றபோது, எங் களை சஸ்பெண்ட் செய்து வெளியே தூக்கியெறிந்துவிட்டு,அவர்கள் விருப்பத்திற்கு சட்டங்களை நிறை வேற்றிக்கொண்டார்கள். ஆனால் வெளியே, எதிர்க்கட்சியினர் நாடா ளுமன்றத்தை முடக்குகிறார்கள்; மக்கள் வரிப்பணத்தை வீணாக்கு கிறார்கள் என்ற அவதூறு செய்தி யை பரப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க் கள் நியாயத்திற்காக போராடினோம். மக்களுக்காக குரல் கொடுத்த நேரத்திலே முடக்கப்பட்டபோது, ஜனநாயக முறையில் அதனை எதிர்த்து நின்றோம்.
வெள்ளம் வந்தபோது தமிழ் நாட்டிற்கு வராத பிரதமர், புயலடித்த போது வந்து விசாரிக்காத உள் துறை அமைச்சர் இன்றைக்கு ஏழாவது தடவையாக தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் என்றால், உங்கள் கையிலிருக்கிற வாக்கிற்காக, உங்களுக்கு தர வேண்டிய மரியாதைக்காக என் பதை மறந்துவிடாதீர்கள். மக்கள் அத்தனை பேருக்கும் பொறுப்பும் அதிகாரமும் இருக்கிறது.
இந்த தேர்தலில் மதுரை தொகு தியில் வேட்பாளர் சு.வெங்கடேசனு க்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.
இந்து விதவைகளை வஞ்சித்த நீங்களா, முஸ்லிம் பெண்களைக் காப்பீர்கள்?!
எல்லா மதத்தவரும் ஒன்றாக வாழும் இந்த நாட்டிற்கு ஊறு நேர்ந்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங் கள் மூலம் இவை நேர்ந்திருக்கிறது. ஒன்று முத்தலாக் தடைச்சட்டம். இதுகுறித்து பிரதமர் மோடி பெரு மையாகப் பேசியிருக்கிறார். உத்த ரப்பிரதேசத்திலும் மேற்குவங்கத்தி லும் லட்சக்கணக்கில் இந்து வித வைப் பெண்கள் உள்ளனர். வாழ வழியின்றி ரிக்சா இழுக்கிறார்கள், கூலி வேலை செய்கிறார்கள். இத்த கைய நிலையில் உள்ள இந்து விதவைப் பெண்களின் மறுவாழ் வுக்காக தமிழ்நாட்டில் உள்ள திட்டம் போன்று ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் நான் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை அனை வரும் ஆதரித்துப் பேசினர். ஆனால் வாக்கெடுப்பில் பாஜக எம்.பி.க்கள் எதிராக வாக்களித்த தால் அந்த தீர்மானம் தோற்கடிக் கப்பட்டது.இந்து விதவைப் பெண்க ளுக்கு எதிர்த்து வாக்களிக்கும் நீங்களா (பாஜகவினர்) இஸ்லாமிய விதவைப் பெண்களுக்கு ஆதர வாக சட்டம் கொண்டு வருகின்றீர் கள்? இல்லை, இஸ்லாமிய ஆண்க ளை வஞ்சிப்பதற்காக, சிறையில் அடைப்பதற்காக முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவந்துள்ளீர் கள். பெரும்பான்மையால் பாஜக இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தை நிறைவேற்ற ஆதரவளித்த கட்சி அதிமுக.
அதிமுகவின் பெரும் துரோகம்
அண்டை நாடுகளிலிருந்து வரக்கூடிய முஸ்லிம்களுக்கு குடி யுரிமை வழங்க மறுக்கிறது பாஜக கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம். இந்த சட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்கவில்லை. இந்த சட்டம் குறித்து திருத்தங்க ளை கொடுத்தோம். ஒன்று முஸ்லிம்களை சேர்க்க வேண்டும். இலங்கை நாட்டை, அங்கிருந்து வரக்கூடியவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி னோம். குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி கள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. தீர்மானத்தை எதிர்த்து, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவின் 13 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று அதி முகவின் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.ஆனால் முஸ்லிம் மக்களின் பெரும் அவலத்திற்கு காரணம் அதிமுக என்பதை மறந்து விடாதீர்கள். பாஜக கொண்டுவந்த படுபாதகச்சட்டங்களுக்கு உறு துணையாக பக்க பலமாக நின்ற வர்கள் அதிமுகவினர்.
இத்தகைய கொடிய பாஜக ஆட்சியை,பணக்காரர்களுக்கான மோடி ஆட்சியை மாற்ற வேண்டும். உங்கள் கையில் உள்ள ஒற்றை வாக்கால் இதனைச் செய்ய முடியும்.நாட்டை காக்க, ஜனநாயகத்தைக் காக்க,இந்துக்களும் இஸ்லாமி யர்களும் கிறிஸ்தவர்களும் என அனைத்து மக்களும் இந்த மண் ணிலே சேர்ந்து வாழும் நிலை தொடர, ஏப்ரல் 19 அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு திரும்புங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்பிரச்சாரத்தில் திமுக சார்பில் மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, மாவட்டப் பொருளாளர் முருகவேல், பகுதிச் செயலாளர்கள் ஜீவன் ரமேஷ், முத்து, பேஸ் முத்தையா மற்றும் காதர், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநிலக்குழு உறுப்பினர் க.திருச் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் அபுதாகீர், காங்கி ரஸ் சுந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சீனி முகமது, மாவட்டச் செயலாளர் இப்னு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன் மற்றும் ஏராள மான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஜீவாநகர் சந்திப்பு பகுதியிலும் திருச்சி சிவா எம்.பி., வாக்குச்சேக ரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.