districts

img

தியாகி சிவராமன் நினைவஞ்சலி

திருத்துறைப்பூண்டி, மே 3- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தியாகி சிவராமன் நினைவஞ்சலி சிபிஎம் மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் சி.ஜோதி பாசு தலைமையில் நடை பெற்றது.  தியாகி சிவராமன் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்  யப்பட்டது. இதில், முத்துப் பேட்டை நகரச் செயலாளர்  செல்லத்துரை, ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். ஒன்றியக் குழு உறுப்பினர் இராஜேந்திரன், நகரக்குழு உறுப்பினர் மதிவாணன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.