ஜுன், 4- அருப்புக்கோட்டை மற் றும் அதன் சுற்றுவட்டார பகு திகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த மாதம் முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஜூன் 4 ஞாயிற் றுக்கிழமை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய் யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலை யில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யில் ஞாயிறு அன்று மாலை 3 மணி அளவில் பயங்கர மான சூறைக்காற்று வீசியது அதை தொடர்ந்து கனமழை பெய்தது.அப்போது சாலை யோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மிகப் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையின் நடுவே மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் மின்சார கம்பி கள் மீது மரக்கிளைகள் ஒடிந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன. மழை நின்ற சிறிது நேரத்தில் விரைந்து வந்த காவல்துறை மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சாலை மற்றும் வயர்களில் விழுந்தி ருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப் பட்டது. அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் நான்கு மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன இத னால் அப்பகுதியில் மின்சா ரம் தடை செய்யப்பட்டது.
கழிவுநீரின் பிடியில் அருப்புக்கோட்டை நகரம் கனமழையால் நகரின் முக்கிய வீதிகளான விருது நகர் சாலை, பழைய பேருந்து நிலையம் பகுதி, சிவன் கோயில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளின் நடுவே கழிவு நீர் ஆறு போல் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசி யது. பகுதியில் உள்ள குடி யிருப்பு வாசிகள் தங்கள் வீட்டின் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர்.நக ரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவுநீர் வாறுகால் களை அருப்புக்கோட்டை நக ராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராத காரணத்தால் மழை பெய்தவுடன் கழிவுநீர் முழுவதும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.இத னால் வாகன ஓட்டிகள் மற் றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து அருப்புக்கோட்டை நகர் முழுவதும் முக்கிய வீதிகளில் உள்ள வாறு கால்களில் தேங்கியுள்ள மண் மற்றும் கற்களை அப்பு றப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.