மதுரை, ஜூலை 19- விடுப்பின்றி பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது நிலைமையையும் பயணிகளின் நிலைமையையும் கவனத்தில் கொண்டு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களுக்கு உட் பட்டு வாராந்திர விடுப்பு உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் புதனன்று போராட்டம் நடத்தினர். மதுரை அரசு போக்குவரத்து கழகம் எல்லீஸ் நகர் பணிமனையில் எம். சுரேஷ்பாபு என்ப வர் நடத்துநராக கடந்த 12 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சிறு விபத்தில் காலில் அறு வைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்து வச் சிகிச்சைக்குப் பின் பணியாற்றி வருகிறார். மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல விடுப்பு வேண்டும் என ஒரு மாதமாக் கேட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் காலை பணிக்கு வந்த அவர் போக்குவரத்து மேற் பார்வையாளரிடம் விடுப்புக் கேட்டுள்ளார் .விடுப்பு மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ரத்த அழுத்தம் அதிகமாகி சுய நினைவு இல்லாமல் மயக்கமுற்றார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்ட அவருக்கு நான்கு மணி நேரத் திற்கு பிறகு சுயநினைவு திரும்பி உள்ளது.
தற் போதும் மருத்துவச் சிகிச்சையில் உள்ளார். நடத்துநருக்கு விடுப்புத் தர மறுத்த அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பராம ரிப்புப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு விதிப்படி விடுப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் கே.குமரன் தலைமை வகித்தார். சம்மேளன (சிஐடியு) துணைத் தலை வர் வீ.பிச்சை, பொதுச்செயலாளர் கனக சுந்தர், துணைப் பொதுச் செயலாளர் மணி மாறன், மத்திய சங்க நிர்வாகி சுதாகரன் கிளைச் செயலாளர் சிவக்குமார் உட்பட 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்ட னர். தொழிலாளர்கள் கூறுகையில், எல்லிஸ் நகர் பணிமனையிலிருந்து 62-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுமார் 340 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வாகனப் பராமரிப்பில் 22 தொழிலாளர்கள் இருக்க வேண்டும். இரண்டு தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பழையவை.விடுப் பின்றி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்று கின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.