இராமநாதபுரம், அக்.4- 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசு துவக்கி முடித்து விட வேண்டும், ஓட்டு நர்கள், நடத்துநர்கள், பராமரிப்பு தொழிலாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) புறநகர், நகர் பரமக்குடி கிளைகள் சார்பில் கோரிக்கை விளக்க திறவுகோல் என்னும் கலை நிகழ்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, சிவகங்கை மாவட்டத் தலைவர் வி.வீரையா, போக்குவரத்து தொழிலாளர் மத்திய சங்க தலைவர் எஸ்.ஆர்.ராஜன், துணைத் தலைவர் வி. பாஸ்கரன், பொதுச் செயலாளர் தெய்வீர பாண்டியன், செயலாளர் கே.பாஸ்கரன், துணைப் பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன், சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.