districts

img

போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு ஆண்டு பேரவை

மதுரை, டிச. 27-  மதுரை அரசு விரைவு போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 11 வது ஆண்டு பேரவை தோழர்கள் எஸ்.மன்னார்சாமி, என்.நன்மாறன் நினைவரங்கில் (ஸ்ரீ லட்சுமி மஹால்) ஞாயி றன்று பணிமனை தலைவர் எஸ். காமராஜ் தலைமையில் நடை பெற்றது. துணை பொதுச்செய லாளர் ஆர்.நாகராஜன் வர வேற்று பேசினார். மாநில தலை வர் எஸ்.கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், முன்னாள் பென்சன் டிரஸ்ட் உறுப்பினர் வீ. பிச்சை, அரசு போக்குவரத்து ஓய்பெற் றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.தேவ ராஜ், அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என்.ஜெயச் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் செயலாளர் என்.மகாலிங்கம் ,பொருளாளர் என்.மனோகரன் ஆகியோர் அறிக்கைகள் சமர்பித்தனர்.  பஞ்சப்படியை உயர்த்தியும் அதற்குண்டான அரியர்ஸ் நில வைத் தொகை வழங்க மற்றும் 24.9.19 அன்று போக்குவரத்து செயலாளர் ஒத்துக்கொண்ட அடிப்படையில் உடனே “டிஏ” அரியர்ஸ் வழங்க வேண்டும்.போக்குவரத்துத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்றே அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 1 ஆம் தேதியன்று பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட் பல்வேறு தீர்மா னங்கள் வழங்கப்பட்டன.