குழித்துறை, பிப்.26- கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ் சுதாகர் இவருக்கு சொந்தமான மினி டிம்போ வாகனம் உள்ளது. இந்த வாகனம் மூலம் முட்டம், குளச்சல் துறைமுகங்களில் இருந்து மீன்களை எடுத்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சனியன்று காலை முட்டம் பகுதியில் இருந்து மீன் குளை எடுத்து கேரளாவில் இறக்கி விட்டு ஓட்டுநர் மகேஷ் களியக்காவிளை வழியாக முட்டம் செல்வதற்காக வந்து கொண்டு இருந்த போது களியக்காவிளை காவல் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்த சைகை காட்டிய பின்பும் வாகனத்தை நிறுத்தவில்லை. வாகனத்தை பின் தொடர்ந்து வந்த களி யக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகுமரன் குழித்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாக னத்தை மடக்கி சாலையில் நிறுத்தி சாவியை எடுத்து விட்டு ஓட்டுநர் மகேஷிடம் காவல் நிலையம் வருமாறு கூறி சென்றுள்ளார். இதனிடையே வாகனம் நிறுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை குறுகிய பகுதியும், ஆபத்தான வளைவான பகுதி என்பதால் இரு பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடி யாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து பகுதி மக்கள் கூறுகை யில், வாகனம் நிறுத்தாமல் வந்திருந்தால் வாகனத்தை காவல் நிலையம் கொண்டு செல்லலாம், அல்லது சாலையின் ஓரம் வாகனத்தை நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டு நெருக்கடி மிகுந்த சாலையில் அதுவும் அடிக்கடி விபத்து நடைபெறும் ஆபத்தான வளைவான பகுதியில் வாக னத்தை நிறுத்தி சாவியை எடுத்து சென்று அடாவடி செய்த களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் முத்துகுமரனின் செயல் அப்பட்டமான அத்துமீறல் என தெரி வித்தனர்.