கும்பக்கரை அருவியின் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
தேனி, மார்ச்.26- பெரியகுளத்தில் இருந்து 8கிமீ.தொலைவில் அமைந்துள்ளது கும்பக் கரை அருவி. கொடைக்கானல் வனஉயி ரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப் பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகு தியில் பெய்யும் மழைநீர் இங்கு அருவி யாக கொட்டுகிறது. கடந்த மாதம் மழை யில்லாததால் நீர்வரத்து மிகவும் குறைந்தது. இந்நிலையில் ஞாயிறன்று கொடைக் கானலின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கும்பக் கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படத் தொடங்கியது. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வன அலுவ லர்கள் விசில் மூலம் எச்சரித்து சுற்றுலாப் பயணிகளை கரைப்பகுதிக்கு வரவ ழைத்தனர். இருப்பினும் நீர்வரத்து வெகுவாய் அதிகரித்ததால் சுமார் 30பேர் கரைக்கு வரமுடியவில்லை. எனவே பாதுகாப்பாக மறுகரையில் ஏறி வனப்பகுதியில் நின்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து வனப்பகுதி யின் மறுகரையில் உள்ள சிறுபாலம் வழியே ஊழியர்கள் வழிகாட்டுதலின் படி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கரைப்பகுதி திரும்பினர்.
கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம்
சிவகங்கை, மார்ச் 26- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அருங்காட்சியத்தை பார்வையிட வருகை தரும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி உள்நாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு - ரூ.15, சிறியவர்களுக்கு- ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 என்றும், வெளிநாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 என பார்வையாளர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்படம் எடுக்க - ரூ.30, வீடியோ எடுக்க - ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு செல்கிறது: அமைச்சர்
சென்னை, மார்ச் 26- தமிழ்நாட்டில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ‘‘தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஹெச்3என்2 (H3N2) என்னும் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது என்கிறார். இதுவரை 33,544 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் 14.13 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் இருப்பதால் விரைவில் 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசு வேலை மோசடி: இருவர் மீது வழக்கு
விழுப்புரம், மார்ச் 26- அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள ராமையன்பாளையம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 36). இவரும் விழுப்புரம் கே.கே.ரோட்டை சேர்ந்த அருமைநாதன் என்பவரும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலு வலர் அலுவலகத்தில் தற்காலிக ஊழி யர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அருமைநாதன், ராஜ சேகரிடம் சென்று தனது நண்பரான சென்னை அய்யம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வரும் பரணிகுமார் மூல மாக அரசு வேலை வாங்கித் தரு வதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராஜசேகர், தனக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அருமைநாதன் மூலமாக பரணிகுமாரிடம் ரூ.6 லட்சத்தை கொடு த்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அவர்கள் இருவரும் இதுநாள் வரை யிலும் ராஜசேகருக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து ராஜசேகர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பரணிகுமார், அருமைநாதன் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.